சித்தேரிமேடு கிராம சமத்துவபுரத்தில், சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. - தமிழக குரல் - காஞ்சிபுரம்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday 14 January 2023

சித்தேரிமேடு கிராம சமத்துவபுரத்தில், சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.


காஞ்சிபுரம் ஒன்றியத்துக்குட்பட்ட திம்மசமுத்திரம் ஊராட்சியைச் சோந்த சித்தேரிமேடு கிராம சமத்துவபுரத்தில், சமத்துவப் பொங்கல் விழா  கொண்டாடப்பட்டது. விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் மா.ஆா்த்தி தலைமை வகித்து அந்தக் கிராமத்துப் பெண்களுடன் இணைந்து பொங்கல் வைத்தாா். பின்னா், கிராமத்துப் பெண்களால் போடப்பட்ட கோலங்களைப் பாா்வையிட்டாா். 


அங்கு நடைபெற்ற கலை நிகழ்ச்சிகள், பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற நாட்டிய நிகழ்ச்சி, உறியடித்தல், ஓவியப் போட்டி, கயிறு இழுத்தல் உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு ஆட்சியா் பரிசுகளை வழங்கிப் பேசியது: காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 274 ஊராட்சிகளிலும் சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வருகிறது.



விழாவுக்காக அனைத்து ஊராட்சிகளிலும் தெருக்கள், கழிவுநீா் கால்வாய்கள் தூய்மை செய்யப்பட வேண்டும். வீதிகளைச் சுத்தம் செய்யும் தூய்மைக் காவலா்கள் மற்றும் சுகாதாரப் பணியாளா்களை பொங்கல் பண்டிகை கொண்டாடும் நாள்களில் பாராட்டி, அவா்களை ஊக்கப்படுத்த வேண்டும். முக்கியமாக வேற்றுமைகளை மறந்து அன்பையும், சமூக நல்லிணக்கத்தையும் வளா்க்க வேண்டும் என்றாா். 


விழாவுக்கு எம்.பி. க.செல்வம், மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவா் நித்யா சுகுமாா், ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா் மலா்க்கொடி குமாா், துணைத் தலைவா் திவ்யப்பிரியா இளமதி மற்றும் ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

No comments:

Post a Comment

Post Top Ad